Thursday 8 October 2015

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்



கோபுர தரிசனம்  கோடி புண்ணியம் என்பார்கள். பலரும் அதற்கான ஆன்மீக விளக்கங்களும்,அறிவியல் பூர்வமான விளக்கங்களும் கொடுத்துள்ளனர். நானும் பல கோவில்களுக்குச் சென்று  கோபுரங்களை  பார்த்திருக்கிறேன். தமிழர்களின் சிற்பக்கலைக்கு கோபுரங்கள் சாட்சியாக வானுயர  உயர்ந்து நிற்பது ஒருவித பரவசத்தியே  உண்டு பண்ணுகிறது.
பொதுவாக மனிதர்கள் நாம் பிறந்த மண்ணாகிய இந்த பூமியையே உற்று நோக்குவதை  பிரவித்தொழிலாகக் கொண்டுள்ளனர்.மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் தவிர  தங்கம் ,வெள்ளி, இரும்பு முதலிய உலோகப் பொருள்களும்,பெட்ரோலியப் பொருட்களும் ,நவரத்தினங்களும்,இரசாயனங்களும்,மூலிகைகளும், , மற்ற பொருட்களும் மண்ணில் இருந்தே மனிதன் எடுத்துக் கொண்டு தன் பிறவிப் பயன் மறந்து திரிந்து கொண்டு இருக்கிறான்.

தன அடையாளத்தைத் தொலைத்த மனிதனின் கவனத்தை  விண்நோக்கி திருப்புவதன் பொருட்டே  அக்கால ஞானிகள்  வானுயர்ந்த  கோபுரதரிசனம்  நல்ல விஷயம் என்று அது கோடி புண்ணியம் தரும் என்று சொல்லி வைத்தார்கள் என்று நினைக்கிறேன்
விண்வெளியில்  கொட்டிக்கிடக்கின்றன கோடானுகோடி அற்புதங்கள். கோடிக்கணாக்கான சூரியர்களும் சந்திரர்களையும் தவிர என்னவெல்லாமோ  மனிதனின் அறிவுக்கு எட்டாத  ரகசியங்களைக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். அந்த பிரபஞ்ச ஞானத்தை ஓரளவு  அறிய முயற்சிப்பதுதான்  இன்றைய நவீன விஞ்ஞானம்

பிரபஞ்ச ஞானத்தை  அறிய முற்பட்ட சித்தர்களும்  ஞானிகளும் தமது திறமைக்கு  ஏற்ப  அறிந்த தகவல்களை  முழுமையாகப் பதிவு செய்யவில்லை..அதனால்தான் அவர்கள் அறிந்த விஷயங்கள்  காலத்தால்  மறக்கப் பட்டுவிட்டன. நமக்கு கிடைத்த அவர்களது  சில ஆய்வுகளே  சோதிடக் கலையாகவும்,மருத்துவ நூல்களாகவும், யோக சாத்திரங்கலாகவும் நமக்கு கிடைத்துள்ளன. அவைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது..

மனிதன் பிரபஞ்ச அறிவைப் பெற முடியும்  என்பதை யோக கலை பயிற்சியின் மூலம் தேய்ந்து கொள்ள முடியும் என்பதை பிற்கால  சித்தர்கள் தமது அட்டமா சித்து வேலைகள் மூலமாக  மக்களுக்கு புலப்படுத்தியுள்ளனர்.


 எனவேதான்  மண்ணைத்தவிர்த்து  கொஞ்சம்  விண்ணையும்  பார் என்று சொல்வதற்குத்தான் அதில்  கொட்டிக்கிடக்கின்றன கோடி கோடி அற்புதங்கள்  என்பதற்காக  கோபுரதரிசனத்தை வலியுறுத்தினார்கள் என்று நான் கருதுகிறேன் கோடி புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  நாம் கொஞ்சம் விண்ணையும்  பார்க்கலாமே.
வாழ்க வளமுடன்
ஏகாம்பரநாதர்  கோவில், காஞ்சிபுரம்




Wednesday 30 September 2015

முதியோர் தினம்

எனக்கு வயது  61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்  சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
 பற்றி நினைக்கும் பொழுது  என் மனத்திரையில்  என் சிறு வயது தோற்றமே வந்து முன்  நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது  மனம் என் சிறு வயது  நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள்  மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா  என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே  வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது



சின்ன  சின்னக்  கண்ணனுக்கு  என்னதான்  புன்னகையோ  
என்ற திரைப்பட பாடலில்  வரும் இந்த வரி

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.



முகங்கள்

சாமுத்திரிகா லட்சணம் பற்றி ஆய்வு செய்யும் இருவர் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி எங்கள் நூலகம் வந்தனர். தமிழில் 1935 ல் வெளியிடப்பட்ட அந்த புத்தகம் சாமுத்திரிகா லட்சணம் சம்மந்தமானது என்றும் சொன்னார்கள். அந்த புத்தகத்தின் சாரம் என்னவென்றால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் 20 வகையாகப் பிரிக்கப் பட்டு படைக்கப் பட்டு உள்ளனரவாம். அவர் களின் மாதிரி முகங்கள் அந்த நூலில் வரையப்பட்டு உள்ளனவாம்

ஒவ்வொரு முகத்திற்கும் பொருந்தக்கூடிய பொது குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் அதில் எழுதப்பட்டிருக்குமாம். என்று சொன்னார்கள். 2/12 லட்சம் நூல்கள் கொண்ட எங்கள் நூலகத்தில் அந்த குறிப்பிட்ட நூல் இல்லை. 

இந்த விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் மனிதர்களின் முகங்களைக் கூர்ந்து நோக்கும் வழக்கம் எனக்குள்ளே துவங்கி விட்டது. நான் சந்திக்கும் மனிதர்களில் சிலரது முகங்கள் வேறு ஒன்று அல்லது பல நபர்களை எனக்கு நினைவு படுத்துகிறது. அதைத்தான் சாயல் என்று சொல்கிறார்களோ என்னவோ?

Thursday 24 September 2015

மனோன்மணியம் நாடகத்தில்

சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய  மனோன்மணியம் நாடகத்தில்  வரும் சுந்தர முனிவர்   அரசன் மகள்  திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு  காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை  களிமிகு  கன்னியர்  உளமும்  வாக்கும்  புளியம் பழமும்  தோடும் போலாம் "
 ஆகா . என்ன அருமையாக  சொல்லி இருக்கிறார் . கல்லூரி கால  வசந்த நினைவுகள்.

மனோன்மணீயத்தில் மற்றும்   ஒரு காட்சி:

நடராஜன் என்பவன்  குடிலன் (மந்திரி) மகள்  வாணியைக்  காதலிப்பான்

இது பிடிக்காத சகடர் என்பான்  அரசன்  ஜீவகன்  முன்பாக  நடராஜனைப்  

பற்றி பிவருமாறு சொல்லுவான்

காவலா ! அவனைப் போலயான் கண்டிலன்
சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான்.
தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன்.
எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன்.

பரற்கலு மவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினு நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?

என்பான். இக்காட்சியும் வரிகளும்  மனதில் நன்கு பதிந்து விட்டன. சகடரின்  கூற்று  நினைத்து நினைத்து  நகைப்புக்குரியது.

புறநானுற்றுப் போர்ப்பறை

கல்லூரிக்கால  நினைவுகள்
தமிழ் நாட்டு அரசர்கள் தாங்களுக்குள் சண்டையிடுவதை வழக்கமாகக் கொடிருந்தனனர். தமிழர்களின் வீரம் குறித்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களே புற நாநூறு எனப்படுகிறது . அக்காலத்தில் அரசர்கள் படை எடுக்கும் முன் எதிரி நாட்டு அரசர்களுக்கு போர் தொடுக்கப் போவதை முன்னரே அறிவிப்பார்கள் . அதைத்தொடர்ந்து எதிரி நாட்டு மக்களுக்கும் அது குறித்து இவ்வாறு முன் அறிவிப்பு செய்வார்கள்.



ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி


Tuesday 15 September 2015

பவளமல்லி மரம், பூக்கள்

பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் தென் கீழ் ஆசிய நாடு.

தாய்லந்து நாட்டில் காஞ்சனபுரி மாநிலத்திலும் காணப்பட்டது. இது இந்தியா முழுதும் வளரக்கூடியது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் வழமான மண்ணில் நன்கு வளரும்..இதற்கு சிறிது வெய்யிலும் நிழலும் தேவைப்படும். 10 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளையுடையது. எதிர் அடுக்கில் அமைந்தருக்கும். இலைகள் சொரசொரப்பாக இருக்கும் .இலைகள் தளவாடங்கள் மெருகேற்றப் பயன்படும். பூக்கள் பவழ நிறம் பட்டு வகைத் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும். கிளை நுனையில் பூக்கும். பூக்கள் பவழக் காம்பும், வெண்நிறமும் மல்லிகைப்பூப் போல்  அமைந்திருக்கும், நறுமணம் உடையது. பூக்கள் 5 – 7 இதழ்களையுடையது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும். இந்த மரம் பற்றியும் பூக்கள் பற்றியும் புராணங்களில் இரண்டு கதைகள் சொல்வார்கள். இதன் காய்கள் தட்டையாக வட்ட வடிவில் காணப்படும். இரண்டு விதைகள் இருக்கும்.இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். இந்த மரம் தலவிருட்சமாகக் கருதப் படும். சிவத்தலங்களில் காணலாம். கட்டிங்மூலம் தான் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :– ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.

இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.

வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்.

Thursday 13 August 2015

ஆத்ம சாந்தி

ஆன்மா

இறந்து  போனவர்களுடைய  ஆன்மாவை  யாராலும்  எவ்வகையிலும் சாந்திப் படுத்த  முடியாது

Tuesday 11 August 2015

#பிள்ளையார் #கணபதி #PILLAIYAAR #GANAPATHY

#பிள்ளையார்என்பது பூமிதத்துவம்

மண், ஆசை ,ஈர்ப்பு. உயிர் இருக்கும்வரை உடலை பற்றிக்கொண்டிருப்பார். உயிர் நீங்கியவுடன் உடலைத் தின்றுவிடுவார்.

He is an ALIEN / Example = #Narasimmar #Varaahi #Pillaiyaar #Hanuman #Kaamadenu #Nanthi #Jadaayu

மனித முகமல்லாத மாற்று முகங்களை கொண்ட புராண மாந்தர்கள் யாவரும் = #வேற்றுகிரகவாசிகளே 

உதாரணம் #நரசிம்மர்  #வராஹி #பிள்ளையார் #அனுமன் #காமதேனு  #நந்தி #ஜடாயு 

Sunday 19 July 2015

தைராய்டு பிரச்சனை

நெற்றியில் விபூதி வைத்துவிட்டு விரலில் மீதம்உள்ள விபூதியை கழுத்தில் தடவும் வழக்கம் உள்ளவர்களுக்கு  தைராய்டு பிரச்சனை  இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது.. அதாவது தெரிந்தோ தெரியாமலோ
ஸெல்ப் ஹீலிங் ( self healing) முறையில் கழுத்துப்பகுதியில் உள்ள விசுக்தி சக்கரத்தினை activate செய்வது ஒரு காரணமாக இருக்கலாம்

Sunday 5 July 2015

#கனவில்அம்மாஅப்பா

எனக்கு 12 வயது  ஆகும்போது அம்மா  இறந்துவிட்டார்கள்.
அப்போது  அம்மாவுக்கு 43  வயது. அம்மா இறந்த பிறகு அடிக்கடி  கனவில் வருவார்கள். கனவில் நான் அம்மாவிடம் கேட்கும்  கேள்வி  நீதான்  செத்துப்போய்ட்டியே  அப்புறம் எப்படி அம்மா  உசிரோடு  இருக்கீங்க  என்றுதான் கேட்ப்பேன். அம்மா  அதற்கு  "நான் சாகவில்லை"  என்றுதான் பதில்  சொல்லுவார்கள்.
சுமார் 25  ஆண்டுகள்  கனவில் அம்மா வந்தார்கள் . அப்புறம் வரவில்லை . எந்தந்தையிடம்  அம்மா கனவில்  வருவதில்லையே ஏன்? என்று கேட்டேன் . அதற்கு  அவர் "அம்மா  ஆவி உலகத்திலிருந்து  மேல் உலகம் சென்றிருக்கும்" என்று சொன்னார்கள். சில ஆண்டுகள்  கழித்து அப்பாவும்  இறந்துவிட்டார்கள்.

பிறகு அப்பா  மட்டும்  அடிக்கடி கனவில்  வருவார் அவரிடமும் அம்மாவிடம் கேட்ட  கேள்விதான் கனவிலும் கேட்டேன். அப்பாவும் தான் சாகவில்லை என்றுதான்  பதில் சொல்லுவார் இன்னும் அப்பா கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்
அம்மா இறந்து 49  ஆண்டுகள்  முடிந்துவிட்டன.
நேற்றைய கனவில் 25 ஆண்டுகள்  கழித்து அம்மா வந்தார்கள். ஆனால் சற்று முதிய கோலத்தில்  இருந்தார்கள். அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ன பேசினேன் என்பது மறந்து விட்டது.கனவில் அம்மா தனக்கு வயது 92  என்று சொன்னார்கள். அதன் பின் ஒரு சிறிய 'ஈ' போல உருமாறி பறந்து  சென்று ஒரு புள்ளியாகி  மறைந்துவிட்டர்கள். நான் திகைத்து நிற்கையில்  என் தந்தையார்  கனவில் என்னிடம் வந்தார். அம்மாவிடம்  ரெம்ப நேரம் பேசினாயா? என்று கேட்டார். அத்துடன் கனவு கலைந்தது. காலை  எழுந்தவுடன்  அம்மாவின் தற்போதய  வயது என்ன என்பதை  கணக்குப் போட்டு பார்த்தேன்  அம்மா கனவில்  சொல்லியபடி 92.




Sunday 10 May 2015

அன்னையர் தினம்

1966.அப்போ எனக்கு பனிரெண்டு வயசு. நாலு அணாவுக்கு கருப்பட்டியும் ஒரு அணாவுக்கு காப்பி பொடியும் வாங்கிட்டு வரச் சொன்னீங்க. நான் கடைக்கு போயிட்டு வாரதுக்குள்ள செத்துப்போகனும்னு எப்படி அம்மா முடிவு செஞ்சீங்க?

Saturday 9 May 2015

தணிகை மலை

தணிகை மலை
1999 ம் ஆண்டு  தணிகை மலை  என்ற சிவ பக்தர் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் ஒரு அரசுப்பணியாளர்தான். காவி வேட்டி,கதர் சட்டை, கழுத்தில் உருத்திராட்சை கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை,கால்களில்  செருப்பு இல்லாமல் இருப்பார். அவர் முழுநேர  சிவத்தொண்டு புரிவார். அன்னதானம் ஏற்பாடு செய்தல் ,சிவ பிரசங்கங்கள் செய்தல் ஆகியவை  அவரது தொண்டு.
உடல் நலக் குறைவு காரணமாக  நான் நொந்து பொய் இருந்தேன். சாப்பிட்ட மருந்துகளால்  எனக்கு பயன் கிட்டவில்லை.  எங்கள் மருத்துவர்  கடைசியாக என்னிடம்  நீங்கள்  தியானம் கற்றுக் கொள்வது நல்லது என்று எனக்கு அறிவுறுத்தினார்.

தியானம்  எங்கு கற்றுக் கொள்வது  என்பது தெரியாமல் இருந்த எனக்கு  நண்பர் தணிகைமலை அவர்கள்  வேதாத்திரி மகரிஷி குறித்தும் மனவளக் கலை மன்றம் குறித்தும் விவரித்தார்.  நான் வசித்த சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள மனவளக் கலை மன்றத்தின் முகவரியையும்  பெற்றுத்தந்தார். நன் அங்கு சென்று முறைப்படி உடற்பயிற்சி மற்றும் தியானமுறைகளைக் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்களில்  எனக்கு இருந்த உடல்நல க் குறைவு சரியானது. நான் முன்புபோல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன். நான் என்றென்றும் தணிகை மலைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

சிலகாலம் அவரை நான் சந்திக்கவில்லை . 2007 ல் ஒருநாள் அவரை எழும்பூர் ரயில்வே  ஸ்டேசனில் வைத்துப் பார்த்தேன். முழு சபாரியுடன் வெற்று நெற்றியுடன், கழுத்தில் கொட்டை இன்றி, கால்களில் ஷூக்களுடன் நின்று கொண்டிருந்தார். என்னைப்பார்த்தும் பாராததுபோல் யாருடனோ  பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் யாவும்  முற்றிலும் மாறு பட்டு இருந்தன. அவருடைய மாற்றத்துக்கு என்ன காரணம் என்றும் விளங்கவில்லை. நான் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை இதுவரை பார்த்ததே இல்லை என்ற  வகையில் முகத்தை வைத்திருந்தார். நானும் அவரிடம் எதுவும் பேசாமல்  அகன்று விட்டேன். வாழ்க வளமுடன்

Friday 8 May 2015

சிறுகதை--எனது அனுபவம்

சிறுகதை-- எனது  அனுபவம்

1980--82 காலகட்டத்தில்  மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன்  பழக்கம் ஏற்பட்டது.  தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை  நடத்தினோம்.  மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள்  வெளிவந்தன. அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள்  வந்தன. சிலர் அக்கதைகளை  படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு  அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை  நிறுத்தி விட்டேன்.
எழுத்தாளர்  வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து  பாராட்டினார். முடிந்தால்  அதை குமுதத்தில்  வெளிவருவதர்க்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

 எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன் மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

Thursday 7 May 2015

மனநிலை

மனநிலை பொதுவாக ஐந்து  வகைப்படும்: அவை
விழிப்புநிலை
கனவு நிலை
உறக்கநிலை
துரியநிலை
துரியாதீத நிலை

இதில் ஒவ்வொரு நிலையும் மேலும் ஐந்து, ஐந்து  நிலைகளாக மாறும் அவை;

விழிப்பில் விழிப்பு
விழிப்பில் கனவு
விழிப்பில்  உறக்கம்
விழிப்பில் துரியம்
விழிப்பில்  துரியாதீதம்.

மனிதர்கள்  பெறும்பாலும்  விழிப்பில் கனவு  என்ற நிலையிலேயே  காலம் கழிக்கிறோம்

Monday 27 April 2015

#கண்ணீர் #TearsRollingDown

#கண்ணீர்

அம்மா செத்தபோதும் வரவில்லை, அப்பா இறந்தபோதும் வரவில்லை ,உடன்பிறந்த மூன்று சகோதரிகள் இறந்தபோதும் வரவில்லை,,சகோதரன் இறந்தபோதும் வரவில்லை .மனைவி நோயுற்று அவதிப்படும்போது மட்டும் கண்களின் ஓரத்தில்  வந்து எட்டிப்பார்க்கிறதே ? அதுவும் கீழே விழுவதில்லை.

Thursday 23 April 2015

#பரஞ்சோதிபாபாவடபழனிசென்னை. #PARANJOTHIBAABAChennai



பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை.

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார்.
அவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். சில புகைப்படங்களையும் சிறிய வீடியோவும் எடுத்தேன்.
அவருக்கு வயது 85 என்று சொன்னார்கள்.
அவரை பார்க்க வருபவர்கள் அவருக்கு bread ம் பணமும் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.அப்போது அவர் என்னிடம் பேசினார்.வீட்டுக்கு போவதற்கு முன் பக்கத்து கடையில் நாலு வடையும் tea ம் சாப்பிட்டுவிட்டு போங்க என்று சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. -----மு. நமசிவாயம்.




************






Sunday 19 April 2015

#தம்மண்ணசெட்டியார் #ThammnaChettiyar

#தம்மண்ணசெட்டியார்
சுமார்  90  வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.
ஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள்  என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார். அவர் ஆரம்ப களத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும்  வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும்  சொன்னார். பிறகு தானே சிறு சிறு நூல்கள் எழுதி பல  தலைப்புகளில் வெளியிட்டு வருவதாகவும் சொன்னார். எனக்கும் சில நூல் கள் கொடுத்து படிக்கச்சொன்னார்.
நான் அவரிடம்  #திருமந்திரப் பாடல்கள் சிலவற்றுக்கு வரைந்த படங்கள் ( Now it is to be published #CosmicSecretsAjourneyWithMysticTirumular =  #https://www.tirumular.com/index.php/news/category/exhibitions ) அடங்கிய நோட்டுப் புத்தகத்தை காட்டினேன். அதில் இருந்த படங்களில் சில வற்றுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளதாகச் சொன்னார். மேலும் நான் பணி  புரியும் நூலகத்துக்கு வருவதாகவும் சொன்னார்

பிறகு இரண்டு முறை என் அலுவலகம் வந்து அந்த தள்ளாத வயதிலும் என்னை சந்தித்து பேசினார். ஒரு முறை என்னை தொலை பேசியில் அழைத்து தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார். ஏதோ காரணங்களினால் நான் உடனே போகவில்லை . கொஞ்ச நாள் கழித்து அவரை தொலை பேசியில் அழைத்த பொது அவரது மகன் தம்மண்ண செட்டியார் மறைந்த விஷயத்தை சொன்னார்.
மனசுக்கு  கஷ்டமாக  இருந்தது.

தம்மண்ண செட்டியார் எழுதிய நூல்களின்  பட்டியலை கூகுளில் காணலாம்
அதில் முக்கியமானது = #காதல்+காமம்=கடவுள்  


Sunday 8 March 2015

பூவெல்லாம் கேட்டுப்பார்--ஒரு ரோஜா செடியின் கதை

இந்த ரோஜாசெடி  சுமார் பத்து அடி உயரம் வளர்ந்திருந்தது.ஒரு சிறிய தொட்டியில் இரண்டு ஆண்டுகாலம் வைத்திருந்தோம். பிறகு புது வீடு கட்டி வந்தபின் தரையில் வைத்து வளர்த்து வந்தோம் .அதன் பிறகு செடி உயரமாக வளர ஆரம்பித்தது .பூக்களும் பூக்கத்துவங்கின.ஆறு ஆண்டுகாலம் உயிர் வாழ்ந்தது. இத்தனைக்கும் அதற்கு தனி கவனிப்பு ஏதும் செய்யவில்லை. ஆறு ஆண்டுகள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து பட்டுப்போயவிட்டது.இதற்கிடையில் எவ்வளவோ  புதிய ரோஜா செடிகள்  நட்டு வைத்தும் அவை எதுவும் இதுபோல் வளரவில்லை. நான் வேறு எங்கும் இது போல் வளர்ந்த செடி எதுவும் பார்த்ததில்லை . ரோஜா செடி பொதுவாக இப்படி வளருமா? எத்தனை ஆண்டுகள்  உயிர் வாழும்?

இந்த ரோஜா செடியும்  பரிணாம வளர்ச்சியும்  அதன் முடிவும்  படங்களாக ....

































சப்போட்டா மரம்

  வீட்டுத்தோட்டத்தில் சப்போட்டா மரத்தை எளிதாக வளர்க்கலாம். இதன் பழங்கள் சுவையானது. அதிக சத்து நிறைந்தது. சரும வளர்ச்சியை பாதுகாக்கிறது. நம் தோட்டத்தில் சப்போட்டா பழ மரங்களை வளர்ப்பதன் மூலம் நமக்கு தேவையான சத்தான பழங்களை அன்றாடம் பறித்து சாப்பிடலாம். சப்போட்டா பழ மரம் வளர்ப்பு பற்றி வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது.நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது.ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. சப்போட்டா பழங்கள் ஜூலை – அக்டோபர் மாதத்தில் பயிரிட ஏற்றது விதை & உரமிடல் கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, உள்ளிட்ட பல ரகங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். பயிரிடும் போது 1x1x1 மீட்டர் நீள அகல ஆழ குழிவெட்ட வேண்டும். அதில் 5:10:5 அளவுள்ள சிங்கில் சூப்பர் பாஸ்பேட், வேப்பம்புண்ணாக்கு, நுண்ணியிரி கலந்து உரமிடல் வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். பின்னர் சீரான இடைவெளியிடல தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும்.சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை.உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும். உரம், பூச்சிதாக்குதல் சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக காய்க்கும்.ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஓரளவு காய்க்கும். பேரிக் அமில தழை தெளிப்பானை ஜீன் மாதத்திற்கு இடை இடையில் நான்கு முறை தெளித்தால் சப்போட்டா பழம் நன்கு காய்க்கும். சாப்போட்டாவில் பூச்சி தாக்குதலை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும். புழு கால் களற்று மஞ்சள் நிறமாக காணப்படும். தாய்ப்பூச்சி பழுப்பு நிற கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும். புழு பாதி பழுத்த பழங்களை தாக்கி, மரத்திலிருந்து பழங்களை விழச்செய்யும். தாக்கிய பழங்களில் நீர் வடியும். பழத்தின் மேற்பகுதியில் பழுப்பு நிறத்தில் அழகிய திட்டுகள் காணப்படும். பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட வேண்டும். மரத்தைச் சுற்றி உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம். அறுவடை காலம் சப்போட்டா பழத்தின் முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப் போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை.ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும். பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும். பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி, எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும்.

Saturday 14 February 2015

சுண்டைக்காய் செடி

சுண்டை (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள்,வயிற்றுப் புழுக்கள்பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும்வத்தல் குழம்புசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம்குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய்போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது

பொதுவாக சுண்டைக்காயில் இருவகை உண்டு.
  1. காட்டுச் சுண்டை
  2. நாட்டுச் சுண்டை
காட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படுவது. நாட்டுச்சுண்டை வீட்டுத் தோட்டங்களிலும், கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பு குறைந்தும் இருக்கும். எனினும் இவை இரண்டும் ஒரே தன்மையான மருத்துவப் பயன்களையே தர வல்லன.
சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள்குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.
சுண்டையில் புரதம்கல்சியம்இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல்அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும்கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால்மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும்