Monday 27 April 2015

#கண்ணீர் #TearsRollingDown

#கண்ணீர்

அம்மா செத்தபோதும் வரவில்லை, அப்பா இறந்தபோதும் வரவில்லை ,உடன்பிறந்த மூன்று சகோதரிகள் இறந்தபோதும் வரவில்லை,,சகோதரன் இறந்தபோதும் வரவில்லை .மனைவி நோயுற்று அவதிப்படும்போது மட்டும் கண்களின் ஓரத்தில்  வந்து எட்டிப்பார்க்கிறதே ? அதுவும் கீழே விழுவதில்லை.

Thursday 23 April 2015

#பரஞ்சோதிபாபாவடபழனிசென்னை. #PARANJOTHIBAABAChennai



பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை.

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார்.
அவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். சில புகைப்படங்களையும் சிறிய வீடியோவும் எடுத்தேன்.
அவருக்கு வயது 85 என்று சொன்னார்கள்.
அவரை பார்க்க வருபவர்கள் அவருக்கு bread ம் பணமும் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.அப்போது அவர் என்னிடம் பேசினார்.வீட்டுக்கு போவதற்கு முன் பக்கத்து கடையில் நாலு வடையும் tea ம் சாப்பிட்டுவிட்டு போங்க என்று சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. -----மு. நமசிவாயம்.




************






Sunday 19 April 2015

#தம்மண்ணசெட்டியார் #ThammnaChettiyar

#தம்மண்ணசெட்டியார்
சுமார்  90  வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.
ஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள்  என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார். அவர் ஆரம்ப களத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும்  வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும்  சொன்னார். பிறகு தானே சிறு சிறு நூல்கள் எழுதி பல  தலைப்புகளில் வெளியிட்டு வருவதாகவும் சொன்னார். எனக்கும் சில நூல் கள் கொடுத்து படிக்கச்சொன்னார்.
நான் அவரிடம்  #திருமந்திரப் பாடல்கள் சிலவற்றுக்கு வரைந்த படங்கள் ( Now it is to be published #CosmicSecretsAjourneyWithMysticTirumular =  #https://www.tirumular.com/index.php/news/category/exhibitions ) அடங்கிய நோட்டுப் புத்தகத்தை காட்டினேன். அதில் இருந்த படங்களில் சில வற்றுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளதாகச் சொன்னார். மேலும் நான் பணி  புரியும் நூலகத்துக்கு வருவதாகவும் சொன்னார்

பிறகு இரண்டு முறை என் அலுவலகம் வந்து அந்த தள்ளாத வயதிலும் என்னை சந்தித்து பேசினார். ஒரு முறை என்னை தொலை பேசியில் அழைத்து தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார். ஏதோ காரணங்களினால் நான் உடனே போகவில்லை . கொஞ்ச நாள் கழித்து அவரை தொலை பேசியில் அழைத்த பொது அவரது மகன் தம்மண்ண செட்டியார் மறைந்த விஷயத்தை சொன்னார்.
மனசுக்கு  கஷ்டமாக  இருந்தது.

தம்மண்ண செட்டியார் எழுதிய நூல்களின்  பட்டியலை கூகுளில் காணலாம்
அதில் முக்கியமானது = #காதல்+காமம்=கடவுள்