Friday 16 June 2017

ம பொ சி

ம பொ சி
ம பொ சி என்றதும் பழைய நினைவு. சிதம்பரம் பிள்ளையின் ஜீவிய சரித்திரம் என்ற நூலினை எங்கள் நூலகத்தில் பார்த்ததாக பெ சு மணி என்னும் இலக்கிய அன்பர் ஒருவர் ம பொ சி அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் என் மேல் அதிகாரிக்கு போன் செய்து நூலினைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். நூலை தேடுகின்றோம் கிடைக்கவில்லை. இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது மொத்த நூற்கள். அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. நூலகத்தில் உள்ள பதினைந்து அலுவலர்களும் தேடியும் கிடைக்கவில்லை. சனி ஞாயிறு இரண்டு நாட்களும் யாருக்கும் லீவு கிடையாது பணிக்குவது நூலை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றார் அதிகாரி. பிறகு சனிகிழமை அனைவரும் வந்து தேடினோம் . மாலையில் அது என் கைக்கு அகப்பட்டுவிட்டது.மறுநாள் நானே அந்த நூலினை எடுத்துக் கொண்டு ஆழ்வார் பேட்டை யில் இருக்கும் அவரது இல்லத்துக்குச்சென்று நூலினை அவரிடம் நேரில் வழங்கினேன். இது நடந்த ஆண்டு 1987