Sunday 23 March 2014

பெண்ணாய் பெற

எங்க ஊரு மதுரை. நான் சிறுவனாக இருக்கும்போது தெருவில் குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பெண்மணிகள் யாராவது குடத்தை தூக்கி இடுப்பில்வைப்பதர்க்கு உதவ சொல்லுவார்கள். நான் அப்படி தூக்கி விட்டவுடன் அவர்கள் அடிக்கடி சொல்லுவது என்னவென்றால் "உன் பொண்டாட்டி வெறும் பெண்ணாய் பெற " என்று சொல்லுவார்கள். எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன்.
வாழ்க வளமுடன்.

Tuesday 11 March 2014

திருமந்திரம்

நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்