Sunday 19 April 2015

#தம்மண்ணசெட்டியார் #ThammnaChettiyar

#தம்மண்ணசெட்டியார்
சுமார்  90  வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.
ஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள்  என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார். அவர் ஆரம்ப களத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும்  வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும்  சொன்னார். பிறகு தானே சிறு சிறு நூல்கள் எழுதி பல  தலைப்புகளில் வெளியிட்டு வருவதாகவும் சொன்னார். எனக்கும் சில நூல் கள் கொடுத்து படிக்கச்சொன்னார்.
நான் அவரிடம்  #திருமந்திரப் பாடல்கள் சிலவற்றுக்கு வரைந்த படங்கள் ( Now it is to be published #CosmicSecretsAjourneyWithMysticTirumular =  #https://www.tirumular.com/index.php/news/category/exhibitions ) அடங்கிய நோட்டுப் புத்தகத்தை காட்டினேன். அதில் இருந்த படங்களில் சில வற்றுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளதாகச் சொன்னார். மேலும் நான் பணி  புரியும் நூலகத்துக்கு வருவதாகவும் சொன்னார்

பிறகு இரண்டு முறை என் அலுவலகம் வந்து அந்த தள்ளாத வயதிலும் என்னை சந்தித்து பேசினார். ஒரு முறை என்னை தொலை பேசியில் அழைத்து தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார். ஏதோ காரணங்களினால் நான் உடனே போகவில்லை . கொஞ்ச நாள் கழித்து அவரை தொலை பேசியில் அழைத்த பொது அவரது மகன் தம்மண்ண செட்டியார் மறைந்த விஷயத்தை சொன்னார்.
மனசுக்கு  கஷ்டமாக  இருந்தது.

தம்மண்ண செட்டியார் எழுதிய நூல்களின்  பட்டியலை கூகுளில் காணலாம்
அதில் முக்கியமானது = #காதல்+காமம்=கடவுள்  


1 comment:

  1. பிரபஞ்ச சக்தி அவரது பார்வைகள் அருமை. A great loss. :(

    ReplyDelete