Thursday 23 April 2015

#பரஞ்சோதிபாபாவடபழனிசென்னை. #PARANJOTHIBAABAChennai



பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை.

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார்.
அவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். சில புகைப்படங்களையும் சிறிய வீடியோவும் எடுத்தேன்.
அவருக்கு வயது 85 என்று சொன்னார்கள்.
அவரை பார்க்க வருபவர்கள் அவருக்கு bread ம் பணமும் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.அப்போது அவர் என்னிடம் பேசினார்.வீட்டுக்கு போவதற்கு முன் பக்கத்து கடையில் நாலு வடையும் tea ம் சாப்பிட்டுவிட்டு போங்க என்று சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. -----மு. நமசிவாயம்.




************






No comments:

Post a Comment