Wednesday 30 September 2015

முதியோர் தினம்

எனக்கு வயது  61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்  சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
 பற்றி நினைக்கும் பொழுது  என் மனத்திரையில்  என் சிறு வயது தோற்றமே வந்து முன்  நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது  மனம் என் சிறு வயது  நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள்  மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா  என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே  வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது



சின்ன  சின்னக்  கண்ணனுக்கு  என்னதான்  புன்னகையோ  
என்ற திரைப்பட பாடலில்  வரும் இந்த வரி

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.



No comments:

Post a Comment