Saturday 5 January 2013

அரைஞான் கயிறு



ஆண்குழந்தை பிறந்தவுடன் இடுப்பில் காட்டப்படும் கருப்பு கயிறு இது.அவன் வளர்ந்து வாழ்ந்து செத்து சுடுகாடு போகும்வரை இடுப்பில்தான் இருக்கும்.பிணத்தை அடக்கம் செய்யும்போது அல்லது எரிக்கும்போது அக்கயிறு கத்தரிக்கப்படும்.
என்னமோ தெரியவில்லை சில நாட்களாக என் இடுப்புக்கயிறு இடுப்பில் நிற்காமல் இறங்கி இறங்கி வந்து கொண்டிருந்தது..கயிறு தளர்ந்திருக்கும் என்று எண்ணி அவிழ்த்து இருக்க கட்டியும் பயன் இல்லை. தெருவில் நடக்கும் பொது கயிறாய் மேலே தூக்கி அதன் இடத்தில் நிலை நிறுத்த முயற்சிப்பது தர்ம சங்கடமாக இருந்தது.இரண்டு நாட்களுக்கு முன் கயிறு இடுப்பிலிருந்து இறங்கி பாதம் வரை வந்து விட்டது.யோசனை செய்தேன்.அரைஞான் கயிரை கழற்றி தூக்கி வீசி  விட்டேன். ஆகா இப்போது என்ன சுகமாக இருக்கிறது தெருவில் நடக்கும்போது.

இப்படித்தான் சில பழக்கங்களை கடந்த காலத்தில் தூக்கி வீசி இருக்கிறேன்.
அவை புகை,மது இன்னும் சில....

இதைதான் திருமூலர் இப்படி சொல்லி இருக்கிறாரோ?


ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசை பட பட ஆய் வரும் துன்பம்

ஆசை விட விட ஆனந்தமாமே--திருமந்திரம்





2 comments:

  1. அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினார்


    "அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம் னு சொல்லுவாங்க ....

    உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....

    அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது

    முதலாவது பலன்
    -------------------------------------
    அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும்
    இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.

    கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

    மருத்துவ பலன்
    -----------------------------------
    ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

    உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம்
    ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.


    இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள். நானும் கட்டி இருக்கிறேன் ....

    இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....

    நம் முன்னோர்கள் செய்த தவறு, தாங்கள் பின்பற்றிய முறைகளுக்கு உண்மையான உள் அர்த்தம் என்ன வென்று சொல்ல்மலேயே விட்டது ... அது தான் இந்த ஆரிய பூசாரிகளுக்கு வசதி ஆகிவிட்டது ... அவன் வந்து இந்த அரைஞான் கொடி தீட்டு அதை கழட்டி போட்டு விடு என்று சொன்னால் நம் தமிழர்கள் அதை உடனே கழட்டி போட்டு விட்டு தான் மறுவேலை பார்பார்கள் .. ஏன் என்றால் நம் பாரம்பரிய பெருமை தெரியாமல் , கல் சிலைக்கு தீபஆராதனை காட்டும் அவன் வார்த்தையே உண்மை என்று நம்பும் மனப்பக்குவம் தான்.

    நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல் சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

    வாழ்க தமிழ் வளர்க தமிழர் பாரம்பரியம் —

    ReplyDelete