Saturday, 15 November 2014
Saturday, 11 October 2014
பேரகத்தி பூ
பேரகத்தி பூ ( சீமை அகத்தி)
இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென்
மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும்.
இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற
சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு.
இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக்
காடுகளில் அதிகமாகக்காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா,அமரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும். இது
அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால்
போன்றுமஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் இரவில்
மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதுர்ந்து நீண்ட காய்கள் இருபக்கதுதிலும்அடுக்காகக்
காய்க்கும்.இதன் விதைகள்நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம்
இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள்:
மருத்துவப்பயன்கள்:
சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப்
பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரிய்,பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும்,வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எழிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும்
குணப்படுத்தும். இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு,ஷேம்பு,முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள்.
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.
சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.
படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.
சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.
படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்
Tuesday, 19 August 2014
குருவிக்கூடு வீடியோக்கள்
******
வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோ பகுதி இரண்டு
*********
வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோ பகுதி மூன்று
**********
**********
வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோ பகுதி ஐந்து
Tuesday, 12 August 2014
Saturday, 21 June 2014
#பெயர் #NameReflectsCosmicRecords
பெயர் என்பது உடலுக்கு அல்ல. அது ஆன்மாவுக்கு உரியது.
தாய் தந்தையரே மனிதருக்கு கடவுள்.
அவர்கள் வைத்த பெயரை போற்றுதல் நன்று.
#பிரபஞ்சப்பதிவேட்டில் அவர்கள் வைத்த பெயர்தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
#மண்ணாங்கட்டி #ஆலமரத்தான் #மண்டு #சொரிமுத்து #விருமாண்டி #காக்குவீரன் இவையெல்லாம் புனித பெயர்களே
Thursday, 19 June 2014
சிரிப்பு
சிரிப்பது எனக்கு ரெம்ப பிடிக்கும்.நண்பர்களுடன் சேர்ந்து சிரிப்பது மறக்க முடியாத ஒன்று.ஆனாலும் மனசுக்குள் ஒரு பயம் இருக்கும்.சிரிக்கும்போது அவ்வளவாக சத்தம் வராது.அது நமட்டு சிரிப்பில் ஆரம்பிக்கும்.என்னுடன் சேர்ந்து சிரிப்பவரைப்பார்க்கும்போது சிரிப்பு மேலும் அதிகரிக்கும்.உடல் வயிறு,முதுகு எல்லாம் குலுங்கும்.விலாவில் பிடித்துக்கொள்ளும். சிலசமயம் சிரித்து சிரித்து உயிர் போய்விடுமோ என்று பயமாக இருக்கும்..சிரிப்பு நின்ற பிறகும் கொஞ்ச நேரம் முதுகு வலிக்கும்.
Monday, 16 June 2014
சாவு
சாவதற்குள் ஒருமுறை திருமந்திரம் படித்துவிட்டு சாகுங்கள். புரியாத பாடல்களை விட்டுவிடுங்கள் .உங்களுக்கான பாடல் உங்களுக்கு புரியும்
Subscribe to:
Comments (Atom)

