Showing posts with label சாமுத்திரிகா லட்சணம். Show all posts
Showing posts with label சாமுத்திரிகா லட்சணம். Show all posts

Wednesday, 30 September 2015

முகங்கள்

சாமுத்திரிகா லட்சணம் பற்றி ஆய்வு செய்யும் இருவர் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி எங்கள் நூலகம் வந்தனர். தமிழில் 1935 ல் வெளியிடப்பட்ட அந்த புத்தகம் சாமுத்திரிகா லட்சணம் சம்மந்தமானது என்றும் சொன்னார்கள். அந்த புத்தகத்தின் சாரம் என்னவென்றால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் 20 வகையாகப் பிரிக்கப் பட்டு படைக்கப் பட்டு உள்ளனரவாம். அவர் களின் மாதிரி முகங்கள் அந்த நூலில் வரையப்பட்டு உள்ளனவாம்

ஒவ்வொரு முகத்திற்கும் பொருந்தக்கூடிய பொது குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் அதில் எழுதப்பட்டிருக்குமாம். என்று சொன்னார்கள். 2/12 லட்சம் நூல்கள் கொண்ட எங்கள் நூலகத்தில் அந்த குறிப்பிட்ட நூல் இல்லை. 

இந்த விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் மனிதர்களின் முகங்களைக் கூர்ந்து நோக்கும் வழக்கம் எனக்குள்ளே துவங்கி விட்டது. நான் சந்திக்கும் மனிதர்களில் சிலரது முகங்கள் வேறு ஒன்று அல்லது பல நபர்களை எனக்கு நினைவு படுத்துகிறது. அதைத்தான் சாயல் என்று சொல்கிறார்களோ என்னவோ?