Showing posts with label திருமந்திரம். Show all posts
Showing posts with label திருமந்திரம். Show all posts

Thursday, 7 July 2016

கஞ்சா

1970 sslc படிக்கும்போது வகுப்புத்தோழன் புண்ணியத்தால் அந்தபாக்கியம் கிடைத்தது. முதல் அனுபவம் என்றும் பசுமையாக உள்ளது. சுமார் ஏழு ஆண்டுகள் அதைஅனுபவித்தும் முதல் அனுபவத்தில்  நான் கண்ட  அற்புதக் காட்சிகள் வேறு எப்பொழுதும் காணவில்லை. பிறகு நண்பன்ஒருவன் மாரடைப்பில் இறந்துவிட்டான். வயது 25 . அந்தப் பழக்கத்தில் மிகவும் கைதேர்ந்தவன். நல்லவனும் கூட. என்ன செய்வது. பயந்து விட்டேன். அந்தப் பழக்கத்தை உடனடியாக விட்டுவிட்டேன். பெரும்பாலான தீய பழக்கங்களை நான் விடுவதற்கு பயமே காரணம்

Monday, 16 June 2014

சாவு

சாவதற்குள் ஒருமுறை திருமந்திரம் படித்துவிட்டு சாகுங்கள். புரியாத பாடல்களை விட்டுவிடுங்கள் .உங்களுக்கான பாடல் உங்களுக்கு புரியும்

Tuesday, 11 March 2014

திருமந்திரம்

நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்

Tuesday, 8 January 2013

சீப்பு

1966 ம் ஆண்டு நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது எப்பொழுதும் பாக்கெட்  ல் சீப்பு வைத்துக் கொண்டு இருப்பேன்.அடிக்கடி தலை வாரிக் கொள்ளும் பழக்கம் இருந்தது எனக்கு.வீட்டுக்கு அருகில் உள்ள நூலகத்துக்கு சென்று கதைப் புத்தகங்கள் படிப்பேன். ஒரு நாள் நூலகர் என்னிடம், இன்னும் எத்தனை நாளுக்கு சீப்பு வைத்து தலை சீவுவ?
என்று என்னிடம் கேட்டார். நான் சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் வந்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து என் தாயார் அகால மரணம் அடைந்து நான் மொட்டை அடிக்கவேண்டியது ஆகிவிட்டது.சீப்பு வைத்ததனால்தான் அம்மா இறந்து விட்டாரோ என்று நினைத்தேன். இனிமேல் சீப்பு வைக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அப்படி சீப்பு வைத்தால் தந்தைக்கு  ஏதாவது நேர்ந்து விடுமோ என்று கலங்கினேன்.

 1993      ம் ஆண்டு தந்தை இறந்து விட்டார்.அதன் பிறகும்  நான் சீப்பு வைக்கவில்லை ,தலையில் முடியும் இல்லை. அதன் பிறகு என் சகோதரிகள் ,சகோதரர்கள் அனைவருமே  இறந்து விட்டனர்.
  வாழ்க்கை நிலையாமை பற்றி புரிந்து கொள்ள இந்த திருமந்திரம் பற்றி சிந்திக்கலாம்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே----திரு மூலர்



Saturday, 5 January 2013

அரைஞான் கயிறு



ஆண்குழந்தை பிறந்தவுடன் இடுப்பில் காட்டப்படும் கருப்பு கயிறு இது.அவன் வளர்ந்து வாழ்ந்து செத்து சுடுகாடு போகும்வரை இடுப்பில்தான் இருக்கும்.பிணத்தை அடக்கம் செய்யும்போது அல்லது எரிக்கும்போது அக்கயிறு கத்தரிக்கப்படும்.
என்னமோ தெரியவில்லை சில நாட்களாக என் இடுப்புக்கயிறு இடுப்பில் நிற்காமல் இறங்கி இறங்கி வந்து கொண்டிருந்தது..கயிறு தளர்ந்திருக்கும் என்று எண்ணி அவிழ்த்து இருக்க கட்டியும் பயன் இல்லை. தெருவில் நடக்கும் பொது கயிறாய் மேலே தூக்கி அதன் இடத்தில் நிலை நிறுத்த முயற்சிப்பது தர்ம சங்கடமாக இருந்தது.இரண்டு நாட்களுக்கு முன் கயிறு இடுப்பிலிருந்து இறங்கி பாதம் வரை வந்து விட்டது.யோசனை செய்தேன்.அரைஞான் கயிரை கழற்றி தூக்கி வீசி  விட்டேன். ஆகா இப்போது என்ன சுகமாக இருக்கிறது தெருவில் நடக்கும்போது.

இப்படித்தான் சில பழக்கங்களை கடந்த காலத்தில் தூக்கி வீசி இருக்கிறேன்.
அவை புகை,மது இன்னும் சில....

இதைதான் திருமூலர் இப்படி சொல்லி இருக்கிறாரோ?


ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசை பட பட ஆய் வரும் துன்பம்

ஆசை விட விட ஆனந்தமாமே--திருமந்திரம்





Sunday, 30 December 2012

இறைவன்



                                                      திருமூலர்--தமிழ் சித்தர்





ஒன்றே குலம் ஒருவனே தேவன்.--திருமந்திரம்



     சீவன் என சிவன் என்ன வேறில்லை
  சீவனார்   சிவனாரை அறிகிலர்
 சீவனார்   சிவனாரை அறிந்தபின்
     சீவனார்   சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993 


இறைவனை அறியவும் இறைவனை உணரவும் இறைநிலை 

அடையவும் உறுதுணையாக நிற்பது தமிழே என்பதை  உணர்ந்த
  திருமூலர், மூவாயிரம்  தமிழ்ப் பாடல்களில்  திருமந்திரத்தை 

அருளியுள்ளார்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே--திருமந்திரம்