சிறுகதை-- எனது அனுபவம்
1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதர்க்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.
எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன் மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.
எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதர்க்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.
எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன் மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.