Showing posts with label சித்தகத்தி (கருஞ்செம்பை). Show all posts
Showing posts with label சித்தகத்தி (கருஞ்செம்பை). Show all posts

Sunday, 9 December 2012

சித்தகத்தி (கருஞ்செம்பை)

சித்தகத்தி அல்லது கருஞ்செம்பை: இது ஒரு மூலிகைச் செடி. இது ஒரு குறுமர வகை ஆகும். இதன் பூக்களும்,இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை. ஒருதலைவலி அல்லது சாதாரண தலைவலிகள் வராமல் இருக்க, இதன் பூக்களை பறித்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தினசரி தலைக்கு தேய்க்கலாம்.

சைனஸ்,ஜலதோஷம்,சுவாசக் கோளாறுகளுக்கு இதன் இலைகளை பறித்து வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.இது

விரைவாக வளரும். ஆறு மாதத்தில் மரமாகிவிடும்.நான்கு மாதத்தில் பூ பூக்கும்.வீட்டில் வளர்க்கலாம். விதைகள் விழுந்த இடம் எல்லாம் செடி முளைக்கும். கிராமத்தில் வயல்களில் இந்த விதைகளை விதைத்து விடுவார்கள். இரண்டு மாதத்தில் நன்றாக வளர்ந்து விடும். அப்புறம் அதை அப்படியே மடக்கி உழுது விட்டு,நெல் நடவு செய்வார்கள்.நல்ல உரமாகவும் பயன்படும்